கோவை மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டி - மாநகர காவல் ஆணையர் துவங்கி வைத்தார்!

தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் காவலர்களாக பணியில் சேர்ந்து, 50 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகளை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகர காவல்துறை சார்பில் பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.

காவல்துறையில் பெண்கள் காவலர்களாக சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி கோவை மாநகரில் பெண் காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாநகர பெண் காவலர்களுக்கான கைப்பந்து மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.



இதில் ஆய்வாளர் தெய்வமணி தலைமையில் Thunder Girls என்ற அணியும், ஆய்வாளர் தெளலத் நிஷா தலைமையில் Fire என்ற அணியும் மோதின. இதனை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் ஆயுதப்படை உதவி ஆணையாளர் சேகர் மேற்பார்வையில் நடைபெற்றது.



இதில் மாநகர காவல் தலைமை அலுவலக ஆணையாளர் சுகாசினி உட்பட பல்வேறு காவலர்கள் பங்கேற்று விளையாட்டை கண்டுகளித்தனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...