பல்லடத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளுக்கு குவியும் பாராட்டு!

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் கிடந்த 76 வயது முதியவருக்கு முகச்சவரம் செய்து, குளிப்பாட்டி, உணவளித்து, ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.



திருப்பூர்: பல்லடத்தில் ஆதரவற்ற முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் முதியவர் ஒருவர் நடக்க முடியாத நிலையில் கடந்த 9 நாட்களாக ஆதரவற்று படுத்து கிடந்துள்ளார்.

இந்நிலையில், இன்று பாரதிய ஜனதா கட்சியின் அரசு தொடர்பு துறை மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ஆகியோர் அந்த முதியவரிடம் விசாரித்ததில் அவர் சென்னையை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பது தெரியவந்தது.

மேலும், அவரை அவரது உறவினர்கள் பல்லடத்தில் விட்டு விட்டு சென்றதாகவும், ஒன்பது நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உதவ ஆளில்லாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.



இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் இருவரும் அந்த முதியவருக்கு முகச் சவரம் செய்து, குளிப்பாட்டி புது துணிகளை வழங்கி அவருக்கு உணவு அளித்தனர். மேலும் ஆதரவற்ற நிலையில் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி தங்கியுள்ள முதியவர் ஜாகிர் உசேனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒன்பது நாட்களாக உதவ ஆளில்லாமல் தவித்து வந்த முதியவர் பாஜக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார். மனிதநேயத்தோடு செயல்பட்டு முதியவருக்கு உதவிய பாஜக நிர்வாகிகளின் இச்செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...