மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகமூடி அணிந்து மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக கோவையில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருபவர்களை விரைவாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து வந்ததால் அப்பகுதீயில் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாக கோவையில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்த பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருபவர்களை விரைவாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து வந்ததால் அப்பகுதீயில் பரபரப்பு ஏற்பட்டது.