பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை கோரி முகமூடி அணிந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

மக்கள் குறை தீர்ப்பு முகாமில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகமூடி அணிந்து மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாக கோவையில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், பலர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த பன்றி காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

மேலும், காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்கு வருபவர்களை விரைவாக சோதனை செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த வாலிபர் சங்கத்தினர் முகமூடி அணிந்து வந்ததால் அப்பகுதீயில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...