முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் - கோவை ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்!

தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்ற முதியவர், தான் யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் அளித்தார்.


கோவை: தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது75). மனைவி மறைந்த நிலையில், ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். 1980 முதல் மும்பையில் வேலை பார்த்து வந்த இவர், 2019ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.

தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் மஸ்கோத் அல்வா தயாரிப்பு கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அன்று முதல் இவர், தான் யாசகமாக பெற்ற தொகையை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் வாங்கவும் கல்வித்தொகை வழங்கவும் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.



இந்நிலையில், கொரோனா தொற்றுக்குப்பின், தான் யாசகமாக பெரும் தொகை, ரூ.10 ஆயிரமாக சேர்ந்தவுடன் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களிடமும் அவ்வப்போது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சாமியார் போல தோற்றமளிக்கும் இவர், கோயில்களில் தங்குவதை காட்டிலும் காவல்துறை பாதுகாப்புடன் இருக்கக்கூடிய இடங்களான பேருந்து நிலையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள், ரயில் நிலையங்கள் ஆகிய இடங்களில் தங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.



இதுவரை 35க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர்களிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தொகைகளை வழங்கியுள்ள இவர், இன்று கோவை வந்து, தான் யாசகமாக பெற்று சேர்த்துவைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்காக ஆட்சியரிடம் வழங்கினார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...