திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினர் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி உடுமலை தலைமை தபால் நிலையத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதியரசர்களுக்கு திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி தலைமையில் கடிதங்கள் அனுப்பப்பட்டது.
திருப்பூர்: உடுமலை அருகே 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக சார்பில் முதல்வர் மற்றும் நீதியரசர்களுக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.
திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கு அதிகமானோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் நீதி அரசர்களுக்கு தபால் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உடுமலை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற கடிதம் அனுப்பும் நிகழ்வில் திருப்பூர் மேற்கு மாவட்ட மாவட்ட தலைவர் கு.சிங்காரவேலு, மாவட்ட உழவர் பேரியக்க செயலாளர் அ.பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மின்னல் செந்தில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் முத்தமிழ் செல்வி, மாவட்ட துணை தலைவர் பழனிச்சாமி, உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ப.சிவபாலு தளிபேரூராட்சி செயலாளர் ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.