குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் பூச்சி தாக்குதல் - வேளாண் அதிகாரிகள் ஆய்வு!

உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.


திருப்பூர்: குடிமங்கலம் பகுதியில் தென்னை சாகுபடியில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் வட்டாரத்தில் மொத்த சாகுபடி பரப்பான சுமார் 52 ஆயிரம் ஏக்கரில் கிட்டத்தட்ட 34 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு தென்னை மட்டும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் புதிய தென்னை மரங்கள் நடவு செய்யப்பட்டு சாகுபடி பரப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.



இந்தநிலையில் தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வேளாண் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். சென்னை வேளாண்மை துணை இயக்குனர் (பயிர் பாதுகாப்பு) சண்முகசுந்தரம், திருப்பூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மாரியப்பன்,

தோட்டக்கலை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா, விஞ்ஞானிகள்-வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, கலையரசன், குடிமங்கலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்தா மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில் இலுப்ப நகரம் கிராமத்தில் தென்னந்தோப்புகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வின் போது தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, தென்னை குருத்தழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதல் மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு குறித்து கண்டறிந்தனர். மேலும் அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...