கோவை மாவட்ட வங்கிகளுக்கு நடப்பாண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கான கடன் திட்டப் புத்தகத்தை வெளியிட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, 2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவை மாவட்டத்திற்கு 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.


கோவை: கோவை மாவட்ட வங்கிகள் 2023-2024ஆம் ஆண்டில் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட (ACP) புத்தகத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டார்.



இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி துணைப் பொது மேலாளர் சோபித் அஸ்தானா, நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் திருமலா ராவ், ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.



இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது,

ஒவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டிலேயே மிகவும் அதிக பட்சமாக 35,170 கோடிக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டிற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 15,000 கோடியும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு 18,850 கோடியும் இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு 1320 கோடி என மொத்தம் 35,170 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7470 கோடி அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து RSETI யில் பயிற்சி பெற்ற 5 நபர்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...