பணியிடமாற்றம் ஆகும் அதிகாரிக்கு நன்றி சொல்லி வழியனுப்பி வைத்த மக்கள்


கோவை மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பினர்.



கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் சாலைகளில் வசித்து வந்தனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் வீட்டு மனை மற்றும் குடியிருப்பு பகுதிகள் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் இவர்கள் மனு அளித்தனர். அப்போது கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கும், மாவட்ட வருவாய் அலுவலரான கிருஸ்துராஜும் நேரில் சென்று அம்மக்களின் நிலையை பார்த்து அவர்களில் 18 பேருக்கு இடிகரை பகுதியில் பட்டா வழங்கினர். இதில், தற்போது குடியிருப்பு கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மாவட்ட ஆட்சியராக இருந்த அர்ச்சனா பட்நாயக் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜும் புதன்கிழமை பணியிடமாற்றம் ஆக இருக்கிறார்.

இதனையொட்டி கிருஸ்துராஜுக்கு குறவர் இன மக்கள் தாங்கள் செய்த அழங்கார கூடைகளுடன் பூங்கொத்தை கொடுத்து நன்றி செலுத்தியதோடு, அவரை மீண்டும் கோவையிலேயே பணிமேற்கொள்ள வர வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...