கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நந்தினி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நந்தினியை ஏமாற்றி தனது சமூக விரோத கூட்டாளிகளோடு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த இந்து பாசிச சக்திகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியிடக் கூடாது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரை வழக்கில் இணைத்து கைது செய்ய வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநிலக் குழு உறுப்பினர் தி.செ.கோபால், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோதவாடி ராசன், அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், மாநகர தலைவர் புதூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆ.நாகராசன் கண்டன உரையாற்றினார்.
தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் முருகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நந்தினியை ஏமாற்றி தனது சமூக விரோத கூட்டாளிகளோடு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த இந்து பாசிச சக்திகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியிடக் கூடாது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரை வழக்கில் இணைத்து கைது செய்ய வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநிலக் குழு உறுப்பினர் தி.செ.கோபால், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோதவாடி ராசன், அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், மாநகர தலைவர் புதூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆ.நாகராசன் கண்டன உரையாற்றினார்.
தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் முருகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.