பாசிச சக்தியால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நந்தினிக்கு உரிய நீதி வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நந்தினி பாலியல் வன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் உரிய நீதி வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நந்தினியை ஏமாற்றி தனது சமூக விரோத கூட்டாளிகளோடு பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு கொடூரமாக கொலை செய்த இந்து பாசிச சக்திகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். வழக்கு விசாரணை வரும் வரை குற்றவாளிகளை பிணையில் வெளியிடக் கூடாது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜசேகரை வழக்கில் இணைத்து கைது செய்ய வேண்டும். பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை கடுமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் மாநிலக் குழு உறுப்பினர் தி.செ.கோபால், தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கோதவாடி ராசன், அமைப்புச் செயலாளர் தாமரை வீரன், மாநகர தலைவர் புதூர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஆ.நாகராசன் கண்டன உரையாற்றினார். 

தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்டச் செயலாளர் முருகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...