உடுமலை ஜல்லிபட்டியில் குளத்தின் கரை, கால்வாய் கரை உடைப்பு - அதிகாரிகள் அலட்சியம்!

உடுமலை அடுத்த ஜல்லிப்பட்டியில் உள்ள குளத்தின் கரை மற்றும் பிஏபி கால்வாய் கரையை உடைத்து சட்டவிரோதமாக நீரை வெளியேற்றி மீன் பிடிக்கப்பட்டு உள்ளது குறித்து தகவல் தெரிவித்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே ஜல்லிப்பட்டியில் சட்டவிரோதமாக குளத்தின் கரையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, ஜல்லிபட்டியில், 20 ஏக்கர் பரப்பளவில், குளம் ஒன்று அமைந்துள்ளது. கடந்தாண்டு பெய்த பருவ மழையின் காரணமாக குளம் நிரம்பி காணப்பட்டது.



2 தினங்களுக்கு முன், குளத்தின் கரையை உடைத்தும், பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கான்கிரீட் கரையை உடைத்தும், குளத்தில் இருந்த பெருமளவு நீர் முறைகேடாக வெளியேற்றப்பட்டு, மீன் பிடிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அங்கு சென்ற விவசாயிகள், கரை உடைப்பை அடைத்தனர். மேலும், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், குளத்தையும், பி.ஏ.பி., கால்வாயையும் உடைத்தவர்கள் மீது, துறை அதிகாரிகள் போலீசில் புகார் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.



குளத்தின் கரையை பலப்படுத்தவும், குளத்திலிருந்து பி.ஏ.பி., கால்வாய்க்கு தோண்டப்பட்ட குழி மற்றும் பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கரை உடைப்பு, கீழ் மட்ட பாலம் பராமரிப்பு குறித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியும் காட்டாமல் கால்வாய் கரையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...