உடுமலை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நடைபாதை - உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய நடைபாதையின் தரைப்பகுதி மற்றும் கைப்பிடி சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் மையப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்றுப்புற கிராமங்கள், மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றது.

இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது.



பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாமல் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடியானது பல மாதங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.



மேலும் நடைபாதை அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதுமக்களுக்காக தொடங்கப்படுகின்ற எந்த ஒரு சேவையும் திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பாதசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...