சம்பளம் கொடுக்க மறுக்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்றுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

சம்மளம் கொடுக்க மறுக்கும் தனியார் நிறுவனத்திடம் இருந்து சம்பளம் பெற்றுத் தரக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்புலிகள் கட்சியின் சார்பில் மாவட்ட துணைத் தலைவர் சி.ஆறுமுகம் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மேட்டுப்பாளையம் பகுதி உக்கான் நகரில் வசிக்கும் ராஜன் என்பவரின் மகள்களான பிரபா, பிரித்திகா, பிரின்சிகா ஆகிய மூவரும் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சாரதா டெரி டவல்ஸ் ஆலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அந்த ஆலையின் விடுதியில் தங்கி வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதன் காரணமாக ஆலையின் தங்கும் விடுதியிலேயே தங்கி வந்தனர்.

அந்த தங்கும் விடுதியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், உணவு சரியாக கொடுக்காததாலும் இவர்களால் அங்கு தங்கி வேலை செய்ய முடியவில்லை. அதனால் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள்.

இதனால் அந்த ஆலை நிர்வாகம் இவர்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தை இன்று வரை வழங்கவில்லை. மேலும், இவர்களைப் போலவே 800க்கும் மேற்பட்ட 15 முதல் 16 வயது வரை உள்ள பெண்கள் சட்டத்திற்கு புறம்பாக அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மேற்கண்ட நிறுவனத்தின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பெண்களுக்கு உரிய சம்பளம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...