உதகையில் நீலகிரி வனத்துறையினருக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாம் - ஏராளமான அதிகாரிகள் பங்கேற்பு!

உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நடைபெற்ற திறன் மேம்பாடு பயிற்சி முகாமில், நீலகிரி வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நீலகிரி: உதகை அருகே வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



உதகை அருகேயுள்ள கேர்ன்ஹில் பொருள் விளக்க மையத்தில் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு “திறன் மேம்பாடு பயிற்சி” முகாம் நடைபெற்றது.



வனப்பாதுகாவலர் மற்றும் முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கௌதம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தீதடுப்பு காவலர்கள், அதிவிரைவு படை பணியாளர்கள் (RRT) ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



இதில் வன குற்றங்களை கண்டறிதல், வகைப்படுத்துதல், அதனை கையாளுதல், படிவங்கள் பூர்த்தி செய்தல் மற்றும் அதற்கான சட்டங்கள் குறித்த விவரங்கள் வனப்பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது.



மேலும், வனக்குற்றங்கள், வன உயிரின குற்றங்கள் மற்றும் இதர குற்றங்கள் தொடர்பான வனப்பணியாளர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.



பின்னர், Tamilnadu Forest Elite Force, வன உயிர் பயிற்சியகம் மூலம் நீலகிரி வனக்கோட்ட வனப்பணியாளர்களுக்கு தீ தடுப்பு முறைகள், தீ தடுப்பு கருவிகளை கையாளுதல், தீ நிகழ்வுகளின் போது எவ்வாறு செயல்படுதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...