பல்லடம் அருகே சட்டவிரோத மதுவிற்பனை - பெண்கள் சாலைமறியல்!

பல்லடம் அடுத்த நடுவேலம்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ராஜா என்பவரின் வீட்டை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்ட நிலையில், தப்பியோடியவரை கைது செய்யக்கோரி, மாணிக்கபுரம் சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்ய கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையம் என்ற கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் அரசு மதுபான கடை இல்லாத நிலையில் இங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் பல்லடம் சென்று குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர்.



இந்நிலையில் இங்கு ராஜா என்ற நபர் வாடகை வீட்டில் தங்கி சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதாக கடந்த மூன்று மாதங்களாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இன்று ராஜா என்பவர் தனது வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த போது அப்பகுதி பெண்கள் அவரை கையும் களவுமாக பிடித்து அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.



அப்போது, மங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பிடிபட்ட ராஜா தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.



இந்நிலையில், ராஜாவை கைது செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதால் வேலைக்கு செல்லும் ஆண்கள் அதிக விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்குவதாகவும், இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதால் சம்பள பணம் முழுவதும் மது வாங்குவதற்கே செலவு செய்து விடுவதாகவும், பள்ளி மாணவர்கள் உட்பட அதிக விலை கொடுத்து மது பாட்டில்களை வாங்கி குடிப்பதாகவும், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபடும் ராஜாவை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.



சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் மங்கலம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ராஜாவை கைது செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...