கர்ப்பிணிப் பெண் இறப்பு - வால்பாறை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ கந்தசாமி நேரில் ஆய்வு!

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கர்ப்பிணிப் பெண் இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கர்ப்பிணி பெண் இறந்ததை அடுத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சந்திரா விசாரணை செய்தார்.

இந்நிலையில் இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, வால்பாறை அரசு மருத்துவமனையில் காலை 8 மணி அளவில் ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் கர்ப்பிணிப் பெண் இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆப்ரேஷன் தியேட்டர் ஊழியர்கள், ரத்த வங்கி,மயக்க மருந்து மருத்துவர் போன்றவர்கள் இல்லாததால் நோயாளிகளை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப நேரிடுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சில தினங்களாக வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதாலும், வடமாநில தொழிலாளர்களே சிறுத்தை தாக்கி படுகாயம் ஏற்படுத்தி உள்ள நிலையிலும் நேற்று அதேபோல் இஞ்சிப்பாறை பகுதியில் ஒரு தொழிலாளியை கரடி தாக்கியது.

அவரை பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர்.இது போன்று பிரச்சினைகள் வால்பாறை பகுதியில் உள்ளது.

அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு அரசிடம் கோரிக்கை வைப்பதாக வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார். மேலும், இறந்த கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு அவர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.



இந்த ஆய்வின்போது, பொதுநகரச் செயலாளர் மயில் கணேசன் நகர துணை செயலாளர் பொன் கணேசன் ஐடி விங் நகர செயலாளர் சண்முகம் ஆர் ஆர் பெருமாள். மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகவேல் சசி, சுடர் பாலு, எஸ் கே எஸ் பாலு, மற்றும் பலர் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...