பொள்ளாச்சி அருகே தொடர் செயின் பறிப்பு - 13 சவரன் நகையுடன் தூத்துக்குடிப் பெண் கைது!

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் 3 பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் நகை பறிப்பில் ஈடுபட்டனர். கோட்டூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் சிவபாக்கியம் மற்றும் துளசி அம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி கௌதமி (வயது 36) என்பவர் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கௌதமி, மேலும் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கௌதமிடமிருந்து 13 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...