பல்லடம் அருகே 16 ஆண்டுக்குப்பின் நடந்த கோயில் கும்பாபிஷேகம் - ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோயில்களுக்கான கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில், சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம் புதூர் கிராமத்தில் அருள்மிகு மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது. இரண்டு கோவில்களும் புரனமைப்பு செய்யப்பட்டு 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

கடந்த 24 ஆம் தேதி தீர்த்த கலசம் மற்றும் முளைப்பாரி எடுத்து விநாயகர் வழிபாட்டுடன் கும்பாபிஷேகப் பெருவிழா தொடங்கியது.



அம்பிகைக்கு முதற்கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, யாகசாலையில் இருந்து கோபுர கலசத்திற்கு தீர்த்த குடங்கள் எடுத்து வரப்பட்டு, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.



மாகாளியம்மன் மற்றும் விநாயகர் திருக்கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின், மூலவர் சிலைகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...