தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - பரபரப்பு!

புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, நெடுஞ்சாலை துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பு திமுக அரசை கண்டித்து அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக அரசுக்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு ஊழியர் சங்கத்தின் சட்டப்பேரவையில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறி, ஜாக்டோ ஜியோவின் கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,

அன்பில் மகேஷ் ஆகியோர் கூறினர். ஆனால் அது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் ஏமாற்றி விட்டதாக அரசு ஊழியர்கள்குற்றம்சாட்டினர்.

இதேபோன்று மூலனூர், குண்டடம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...