உடுமலை அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு - கால்நடைகளுடன் விவசாயிகள் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் முறைகேடு செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3 கோடி முறைகேடு செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை அடுத்த விருகல்பட்டி பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்கும் திட்டம், அடமான கடன் மற்றும் விவசாயிகள் இருப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சுமார் மூன்று கோடிக்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.



இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் விவசாயிகள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆத்திரமடைந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் தங்களது கால்நடைகளுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு கால்நடைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது,

விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் அடமான கடன் இருப்புத் தொகையில் அதிமுகவை சேர்ந்த தலைவர் பிரகாஷ் மற்றும் கூட்டுறவு சங்க செயலாளர் கீதா ஆகியோர் பல கோடி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு சேர வேண்டிய பணத்தை பலமுறை கேட்டும் வழங்காத காரணத்தால் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் பேசி விவசாயிகளின் பணம் கிடைக்க உரிய வழிவகை செய்யப்படும் என கூறினர்.

இருப்பினும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் வந்து இன்று விசாரணை துவக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் செலுத்திய பணத்தில் 3 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...