பூலாங்கிணர் பகுதியில் நாளை மின்தடை-மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு!

உடுமலை அருகேயுள்ள பூலாங்கிணர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: பூலாங்கிணர் துணை மின்நிலையத்தில் பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், நாளைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உடுமலை மின்வாரிய இயக்குதலும், பேணுதலும் செயற்பொறியாளர் த.மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பூலாங்கிணர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பூலாங்கிணர், தளி பீடர்களில் அமைந்துள்ள மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வடபூதிநத்தம், எஸ். பி.நத்தம், வாளவாடி, தளி, திருமூர்த்தி நகர், ஜல்லிபட்டி, ஓனாகல்லூர், சந்தன கருப்பனூர், லிங்கமவூர், குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...