நிதிதுறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நலனுக்கு எதிராக தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகுதியாக வங்கி ஊழியர் சங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் பிப்ரவரி 28ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு எடுக்கபட்டது. இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த 1000ம் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் கூறும்போது வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வூதிய பலனுக்கு வருமான வரி முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும், உயிர் நீத்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு வங்கிகளை தனியார் மையமாகும் கொள்கையை கைவிடா விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடு போவதாக தெரிவித்தார். இன்று ஒரு நாள் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோவையில் 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது.