கோவையில் 1000ம் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் போராட்டம், வங்கி சேவை பாதிப்பு.


நிதிதுறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நலனுக்கு எதிராக தொழிலாளர் நல சட்டங்களை மத்திய அரசு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பகுதியாக வங்கி ஊழியர் சங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் பிப்ரவரி 28ல் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த முடிவு எடுக்கபட்டது. இன்று ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்த்தில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கோவையில் உள்ள அனைத்து வங்கிகளை சேர்ந்த 1000ம் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் ராஜன் கூறும்போது வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், ஓய்வூதிய பலனுக்கு வருமான வரி முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும், உயிர் நீத்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும் என்றார். மத்திய அரசு வங்கிகளை தனியார் மையமாகும் கொள்கையை கைவிடா விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடு போவதாக தெரிவித்தார். இன்று ஒரு நாள் வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் கோவையில் 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...