13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - உடுமலை இளைஞருக்கு 20 ஆண்டு சிறை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உடுமலையை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவருக்கு 20 ஆண்டு சிறைதண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது21). கடந்த 2022ம் ஆண்டு இவர், 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுகுறித்து, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கோகுலகிருஷ்ணனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், கோகுலகிருஷ்ணனுக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி பாலு உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. தீர்ப்புக்கு பின், கோகுலகிருஷ்ணன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...