கோவை தனியார் நிறுவனத் தொழிலாளர் மீது தாக்குதல் - சக தொழிலாளி கைது!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன தொழிலாளர்கள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார். இது தொடர்பாக, ஆறுமுகம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டர்களாக வேலை செய்து வந்துள்ளனர்.

கடந்த மாதம், ஆறுமுகம் கையில் இருந்த சுத்தியல் தவறுதலாக திருமூர்த்தியின் கால் மீது விழுந்துள்ளது. இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆறுமுகத்தை திருமூர்த்தி இரும்பு பைப்பால் காலில் தாக்கியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் வேலைக்கு வந்த ஆறுமுகத்தை, திருமூர்த்தி கால் காயத்தை வைத்து கிண்டல் செய்ததாக தெரிகிறது.

இதில் ,ஆத்திரமடைந்த ஆறுமுகம் அருகில் இருந்த இரும்பு பைப்பால் திருமூர்த்தியில் தலையில் தாக்கியுள்ளார். இதில் திருமூர்த்திக்கு தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பாக திருமூர்த்தியின் தாய் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகத்தை கைது செய்த துடியலூர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

ஆறுமுகத்தின் மீது ஏற்கனவே வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...