பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசால் நடைபெற்று வந்த தடுப்பணை கட்டும் பணி தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் பேசி வருவதாகவும் தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும், அவர் வந்த பின்னரே இது குறித்து பேச முடியும் என தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்விற்கு விலக்களிப்பது தொடர்பாக சட்டம் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

தங்களுக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கின்றது. சட்டமன்றத்தில் பலத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்விற்கு கட் ஆப் மதிப்பெண் வைத்திருப்பது பாதிப்பு என்ற கருத்து குறித்து பரீசிலனை செய்யப்படும் என அவர் கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்களின் மனதை அமைதிப்படுத்த யோகா வகுப்பு கொண்டு வர ஆலோசித்து வருவதாகவும், முதலமைச்சரின் அனுமதி பெற்று அதனை செயல்படுத்துவோம் எனவும் தெரிவித்தார்.

இதேபோல் கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பணியானது தற்போது நிறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பிரதமரிடம் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும், நீதிமன்ற உத்திரவுப்படி சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.

இரட்டை இலை சின்னம் தங்களிடம் இருக்கிறது, அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைக்க கூடாது என கூற ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமையில்லை எனவும், ஜெயலலிதாவால்தான் இந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது எனவும் தேரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...