எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டின் நிறுவனர் ரங்கசாமி அவர்களின் 135 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்றார். இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, அறங்காவலர்கள் நரேந்திரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை கவின்கேர் பிரைவேட் லிமிடட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசும்போது, எங்கள் அறநிறுவனம் நாங்கள் செய்யும் செயல்களில் திடமாக உள்ளது. இங்கு பணிபுரிவோர், மாணவ, மாணவியர் நலனுக்காகவும், மாணவர்களை நாளை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்க செயல்படுகின்றது என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 14 ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், பரிசாக தங்ககாசும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எஸ்ஆர்ஐடி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனாக்க்ஷி சாகர் நாட்டிய குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை கவின்கேர் பிரைவேட் லிமிடட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சி.கே.ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விஜயகுமார் பேசும்போது, எங்கள் அறநிறுவனம் நாங்கள் செய்யும் செயல்களில் திடமாக உள்ளது. இங்கு பணிபுரிவோர், மாணவ, மாணவியர் நலனுக்காகவும், மாணவர்களை நாளை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்க செயல்படுகின்றது என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் ட்ரஸ்டில் 25 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 14 ஊழியர்களுக்கு நற்சான்றிதழும், பரிசாக தங்ககாசும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எஸ்ஆர்ஐடி முதல்வர் பால்ராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மீனாக்க்ஷி சாகர் நாட்டிய குழுவினரின் சிறப்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.