எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு வைகோவையே குறைசொல்வதா? - துரைசாமிக்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் கேள்வி!

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக மாவட்ட செயலாளர் நாகராஜ், வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு தற்போது வைகோவையே, அவைத்தலைவர் துரைசாமி குறை சொல்கிறார் என்றும், திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று போர் கொடி தூக்கியவர் தான் துரைசாமி எனவும் குற்றம்சாட்டினார்.


திருப்பூர்: வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொண்ட அவை தலைவர் துரைசாமி தற்போது வைகோவையே குறைசொல்வதா என திருப்பூர் மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.



திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள மதிமுக மாநகர மாவட்ட அலுவலகத்தில் மாநகர மாவட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக மாநகர மாவட்ட செயலாளர் நாகராஜ் கூறியதாவது, வைகோ மூலம் எல்லாவற்றையும் பயன்படுத்தி கொண்டு தற்போது வைகோவையே, அவைத்தலைவர் துரைசாமி குறை சொல்கிறார்.

தற்போது திமுகவுடன் மதிமுக இணைய வேண்டும் என்று சொல்பவர். கடந்த காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்த போது திமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று போர் கொடி தூக்கியவர் தான் துரைசாமி. 3 பொதுக்குழுவுக்கு வராத துரைசாமி இன்று வரை அவை தலைவராக இருந்து வருகிறார்.

வைகோ மனிதநேயத்துடன் இருப்பதால் தான் இதுவரை அவைதலைவர் துரைசாமி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதிமுகவில் உள்ளவர்கள் போலி உறுப்பினர் என்று சொல்வது மதிமுக தொண்டர் ஒவ்வொருவரையும் அவமானப்படுத்தும் விதமாக உள்ளது.

இனிவரும் காலங்களில் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுக்கு கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிப்பார்கள். துரை வைகோ கட்சிக்குள் வருவதற்கு முன் மதிமுக 28 அமைப்பாக இருந்ததாகவும்.

அவர் கட்சிக்கு வந்த பின்பு தற்போது 48 அமைப்புகளாக இருந்து வருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் வேண்டாம் என்று வைகோ எப்போதும் சொன்னதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே மதிமுக சொத்துக்களை அபகரித்த அவைத்தலைவர் துரைசாமி ஒழிக என்று, அவருக்கு எதிரான கோஷங்களை கட்சி நிர்வாகிகள் எழுப்பினர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...