மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ - கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அறிக்கை

மதிமுகவுக்கு எதிராக அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி போர்க்கொடி தூக்கியுள்ளார். இதற்கு பதிலடியாக கோவை மாநகர மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு, துரைவைகோவுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக அவைத் தலைவர் துரைசாமி , வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரம் மதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் கணபதி செல்வராசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மகுடங்களை மறுதலித்த ஒப்பற்ற தலைவர் வைகோ. அவரால் அவருக்காக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் மறுமலர்ச்சி திமுக. அந்த இயக்கத்தை வேறு ஒரு இயக்கத்துடன் இணைக்கச் சொல்ல பெரியவர் துரைசாமிக்கு எந்த உரிமையும் இல்லை.

திமுக கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக வை ஆதரித்து பேசியவர் இது போன்ற இழிவான அருவருப்பான அரசியலை இனியாவது கைவிட வேண்டும்.

இயக்கத்தை பிளவு படுத்த நினைத்த தீய சக்திகள் தமிழகம் முழுவதும் ஆளுகிற ஆண்ட இயக்கங்களுக்கு இணையாக வீறு கொண்டு நடைபெறுகிற மறுமலர்ச்சி திமுக ஐந்தாவது அமைப்பு தேர்தலால் நிலைகுலைந்து போயிருக்கிறது.

அதன் வெளிப்பாடே பெரியவர் துரைசாமியின் பேட்டி. தலைவர் வைகோ அவர்களின் வழிகாட்டுதலில் எங்கள் கோவை மாநகர் மாவட்ட மதிமுக பயணம் தொடரும். நம்மவர் துரை வைகோ அவர்களின் கருத்தை ஏற்று இதை கடந்து செல்வோம்.

இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...