பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றிய இளைஞர் - கோவையில் குடியிருப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் அத்துமீறல்!

கோவை கணபதி அருகே சி.எம்.நகரில் 43 சென்ட் காலியிடத்தில் கட்டுமான பொருட்களை குவித்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்போது, பெண்கள் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றியதால் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை கணபதி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சி எம் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தை போலி பத்திரங்கள் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை காந்திமா நகர் பகுதிக்கு வந்திருந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமியை சிஎம் நகர் பொதுமக்கள் நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து புகார் அளித்தனர். இந்த நிலையிலே ராஜா ராம் என்பவரது மகன் வெங்கட் நண்பகளுடன் சி.எம் நகர் பகுதிக்கு வந்து இங்குள்ள 43 சென்ட் இடம் தங்களுக்கு சொந்தமானது என கூறியுள்ளார்.

இதை அறிந்த சிஎம் நகர் வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான அங்கு குவிந்தனர் . இது பற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சப் இன்ஸ்பெக்டர் செல்லமணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினரையும் திங்கட்கிழமை காலை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிவிட்டு அவர்களை சமாதானப்படுத்தி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் இரவு 7 மணி அளவில் வெங்கட் மற்றும் 15 க்கும் மேற்பட்டோர் பைக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களில் கட்டுமான பொருட்களுடன் மீண்டும் வந்து கட்டுமான பொருட்களை காலி இடத்தில் வைக்க முயன்றனர். உடனே சிஎம் நகர் பொதுமக்கள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார் மீண்டும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் முன்னிலையில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது வெங்கட் அழைத்து வந்திருந்த நண்பர்களில் ஒருவர் பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கிருந்த பெண்கள் மீது மோதினார். இதில் சில பெண்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. சரவணம்பட்டி போலீசார் அங்கு விசாரித்துக் கொண்டிருந்த பொழுது பெண்கள் மீது பைக்கை ஏற்றிய சம்பவத்தால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து போலீஸ் ஜிப்பில் ஏற்றினர். பின்னர் பொதுமக்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் அளிக்குமாறு கூறினர்.

பின்னர் வீட்டு உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள், பொருளாளர் சண்முகசுந்தரம் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு 10 மணியளவில் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். தொடர்ந்து அவர்கள் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்ற போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே பெண்கள் மீது பைக்கை ஏற்றி மோதிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...