விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை..! - எம்எல்ஏ ஈஸ்வரன் குற்றச்சாட்டு

50 ஆண்டு காலமாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலையை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.



கோவை: விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு வழி வகை செய்யவில்லை என கொமதேக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் விவசாய அணி சார்பில் அடுத்த தலைமுறையை தாண்டி விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கு நடைபெற்றது.



இதில் கோவை, திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.



விவசாயத்தை அழிவிலிருந்து காத்திடவும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி அடுத்த தலைமுறையினரை விவசாயத்தில் ஈடுபட வைப்பது உள்ளிட்டதலைப்புகளில் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இதில் கொங்கு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

50 ஆண்டு காலமாக விவசாய திட்டங்களுக்கு அரசு பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினாலும் அது உற்பத்தியை பெருக்க மட்டும் தான் இருக்கிறது.

உற்பத்தியாகும் பொருளை எப்படி, எங்கே விற்பனை செய்யலாம் எப்படி நல்ல விலை பெறலாம் என்ற திட்டங்கள் இல்லை. அரசு விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்வதை உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும்.

உள்நாட்டில் வியாபாரம் செய்வது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வது என்ற விழிப்புணர்வை விவசாயிகள் மத்தியில் அரசு ஏற்படுத்த வேண்டும் விதைப்பது, உற்பத்தி செய்வது போன்ற அத்தனை திட்டங்களிலும் அரசு நிதி ஒதுக்கி உதவுகிறது ஆனால் அறுவடை முடிந்தவுடன் அரசு தப்பித்துக் கொள்கிறது அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.

உற்பத்தி செய்யப் பொருளை விற்க முடியாமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றன உற்பத்திக்கேற்ற விலை கிடைப்பதில்லை இதனால் விவசாயிகளை வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு விவசாய நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் இந்த வேறுபாடுகளை அரசு கலைய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...