தாராபுரம் அருகே கோயிலில் தேனீக்கள் தாக்குதல் - 4 வயது சிறுமி உட்பட 15 பேர் பாதிப்பு!

தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற பொதுமக்களை தேனீக்கள் கொட்டியதில் 4 வயது சிறுமி உட்பட 15 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காட்டம்மன் திருக்கோவில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிடச்செல்வது வழக்கம். அந்தவகையில், தேர் பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காட்டம்மன் கோவிலுக்கு நேற்றுச் சென்றனர்.



பக்தர்கள் பொங்கல் வைத்து கொண்டிருக்கும்போது, எழுந்த புகை காரணமாக அங்கிருந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டத் தொடங்கியது. இதில் தேர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மகா (4),சுந்தரபாண்டி (11), பிரியங்கா (21), சுகன்யா (28), பிரியா (32), கவிதா (33), சக்திவேல் (40), கன்னியாத்தாள் (58),வள்ளியம்மாள் (75) உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...