தாராபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டதாக புகார் - பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்ததாகக் கொடுக்கப்பட்ட குழந்தை தங்களுடையது அல்ல என பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மருத்துவமனை நிர்வாகம் மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிய பெற்றோர், இறந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான அபினவ் என்பவரின் மனைவி கீதா பிரசவத்திற்காக நேற்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குழந்தை பிறந்ததை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தது.



பின்னர் அக்குழந்தையை புதைப்பதற்காக அரசு ஆம்புலன்ஸ் மூலம் சுடுகாட்டிற்கு எடுத்துசெல்லப்பட்ட சிறிது நேரத்தில், குழந்தையை எடுத்து சென்றவர்கள், அதைப் புதைக்காமல் மருத்துவமனைக்கு திரும்பி வந்து மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தாராபுரம் காவல்துறையினர் விசாரணை செய்தபொழுது, பிறந்த குழந்தையை மாற்றிவிட்டதாகவும், உயிரிழந்ததாக கூறப்பட்ட குழந்தைக்கு டி.என்.ஏ.பரிசோதனை செய்யவேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...