பல்லடத்தில் உழைப்பாளர் தினத்தில் அரங்கேறிய விபத்து - ஜம்மு காஷ்மீரை சேர்ந்த தொழிலாளி காயம்!

பல்லடம் அருகேயுள்ள எம்.வி.எஸ் நகரில் செயல்பட்டு வரும் E-STAR என்ற டீ தூள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தங்கும் விடுதியில் உள்ள 24 கழிப்பறைகள் இன்று அதிகாலை இடிந்து விழுந்த விபத்தில், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற உழியர் காலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திருப்பூர்: பல்லடம் அருகே வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியின் கழிப்பறை இடிந்து விழுந்ததில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளைஞர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செட்டிபாளையம் சாலையில் உள்ள எம்.வி.எஸ் நகரில் E-Star என்ற டீ தூள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.



ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு அருகிலேயே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் பயன்படுத்துவதற்காக 24 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.



இன்று அதிகாலை திடீரென 24 கழிப்பறைகளும் முழுவதுமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்தது.



இந்த விபத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கு காலில் காயமடைந்த நிலையில் அதிகாலையில் விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த விபத்து குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தரமான அஸ்திவாரம் போடாமலேயே கழிப்பறைகள் கட்டப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் தினத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை ஆய்வு மேற்கொள்ளவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...