தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் மே தின ஊர்வலம்!

மே தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் திருப்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


திருப்பூர்: தொழிலாளர் தினத்தை ஒட்டி திருப்பூரில் பாமக சார்பில் நடைபெற்ற மே தின ஊர்வலத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டனர்.

மே 1ஆம் தேதியான இன்று நாடு முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி தொழிற்சங்கத்தின் சார்பாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை மே தின தொழிலாளர் பேரணி நடைபெற்றது.



இதில் பாட்டாளி தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு மே தின முழக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.



பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தொழிலாளர்களுக்கு ஆறு மணி நேர வேலையாக சமமாக மாற்றக்கோரியும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் தமிழர்களுக்கு 85 சதவீத பணி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான இ எஸ் ஐ, பி எப் பிடித்தம் செய்வதை உறுதி செய்துவிட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள தொழிலாளர்களை 14 மணி நேரம் பணி செய்ய கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வெளிமாவட்டத்திலிருந்து திருப்பூருக்கு வந்து தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இந்த மே தின ஊர்வலத்தில் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட தலைவர் ஆனந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் சங்கர், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் மணிகண்டன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...