கோவை மாநகராட்சி 15வது வார்டில் மே தின கொண்டாட்டம்!

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை 15வது வார்டில் காங்கிரஸ் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் மே தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார்.

காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் பச்சைமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சேக் அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளர் விஜயா மனோகர் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மனோகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் சைக்கிள் சரி செய்யும் தொழிலாளி மருதாசலம் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மே தினம் குறித்து பச்சைமுத்து சாந்தாமணி பச்சைமுத்து, மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சின்னுராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.



அதன்பிறகு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செந்தில்குமார், சதீஷ்குமார், ஆர்.மணி, ரகுபதி, ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...