மே தினம் - உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம்

மே தினத்தை ஒட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர் , கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர்.


திருப்பூர்: மே தினத்தை ஒட்டி உடுமலை சுற்றுவட்டார கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மே தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் படி, சின்ன வீரன் பட்டி, ஆண்டிய கவுண்டனூர், கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை ஊராட்சி உட்பட பல்வேறு கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.



இக்கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகளின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது, கிராம வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் அனைவருக்கும் வீடு கணக்கெடுக்கும் பணி உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.



குறிப்பாக ஜல் ஜீவன் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு கிராம சபை கூட்டங்களில் நடைபெற்றது. இதில், சின்ன வீரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி பழனிச்சாமி, கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காமாட்சி அய்யாவு, பெரிய கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் கருப்ம்மாள், ஆண்டிய கவுண்டனூரா ஊராட்சி மன்ற தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...