கோவை இதயங்கள் அறக்கட்டளை ஆண்டு விழா - நன்கொடையாளர்கள் கவுரவிப்பு!

கோவையில் இதயங்கள் அறக்கட்டளையின் 6வது ஆண்டு விழாவில் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவி வரும் இதயம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


கோவை: கோவையை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை குழந்தைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் உபகரணங்களை இலவசமாக வழங்கி வரும் ‘இதயங்கள் அறக்கட்டளை’-யின் 6ம் ஆண்டு விழா கோவை சிட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஏழை குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.



விழாவில் பேசிய அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணன் சுவாமிநாதன், ‘‘கடந்த, 2017ல், 10 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட‘இதயங்கள் அறக்கட்டளை’ இன்று, 1,100 குழந்தைகளுக்கு உதவி வருகிறது. தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் குழந்தைகள் முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்து தரப்படும், என்றார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, முதல் வகை சர்க்கரை நோய் உள்ள இந்த குழந்தைகளையும், அவர்களை பெற்றவர்களையும் காக்கும் கடமையை கொண்ட அரசும், இந்த சமுதாயமும்கூட இதயங்கள் அறக்கட்டளைக்கு கடன்பட்டிருக்கிறது.

மருத்துவர்களிடம் இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்யும் எண்ணம் இருக்கிறது. இருப்பினும் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகள் காரணமாக, பலரால் இதுபோன்ற உதவியை செய்ய முடிவதில்லை. ‘இதயங்கள் அறக்கட்டளையினர் துன்பம் என்று வந்தவர்களை அன்புடன் அரவணைத்து, உதவி செய்து அவர்கள் துன்பத்தை போக்குகின்றனர். அவர்கள் பணி உன்னதமானது, என்றார்.



இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளும், பெற்றோரும் தங்களுக்கு நிழலாக இருந்து உதவிக்கரம் நீட்டும் நன்கொடையாளர்களின் கால்களை தொட்டு வணங்கி, கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தது காண்போரை நெகிழ வைத்தது.

இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ‘ராசி சீட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், புரொப்பெல் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் வித்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...