கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதல் விமான சேவை - ஏர் இந்தியா அறிவிப்பு!

கோவையில் இருந்து மும்பைக்கு கூடுதலாக ஒரு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட உள்ளது. இந்த சேவையானது நாளை முதல் துவங்கப்பட உள்ள நிலையில், காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் இருந்து மும்பைக்கு நாளை முதல் கூடுதலாக விமானம் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கோவை விமான நிலையத்திற்கு தினமும் 23 உள்ளூர் விமானங்களும், சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவிற்கு செல்லும் இரண்டு சர்வதேச விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் 8,750 பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் இருந்து மும்பைக்கும், மும்பையில் இருந்து கோவைக்கும் கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் கோவையிலிருந்து மும்பைக்கு விமான சேவை துவங்க உள்ளது.

காலை 6.30 மணிக்கு மும்பையில் இருந்து கிளம்பும் ஏர் இந்தியா விமானம் காலை 8.20 மணிக்கு கோவை வந்தடையும், மீண்டும் 9.00 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி 11 மணி அளவில் மும்பை சென்றடையும்.

ஏற்கனவே கோவை மும்பை இடையே இன்டிகோ, விஸ்டாரா என மூன்று விமானங்கள் சேவை இருந்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக விமான சேவை துவங்க உள்ளது. கோவையிலிருந்து வியாபார ரீதியாகவும், வெளிநாடு மருத்துவத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதல் விமான சேவை துவங்கப்பட உள்ளது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...