கோவையில் 17 வயது மகளுக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது!

கோவையில் 2வது திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து, புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கும், 2வது கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

அப்போது அவரது 17 வயது மகள் வளர்ப்பு தந்தை கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததோடு, வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வளர்ப்பு தந்தை மீது சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...