திடீர் கனமழையால் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்தின் அடியில் சிக்கிய மினி பேருந்து - பரபரப்பு!

கோவை மாநகரில் இன்று மாலை பெய்த திடீர் கனமழையின் காரணமாக கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அவ்வழியாக சென்ற மினி பேருந்து ஒன்று அங்கேயே சிக்கிக் கொண்டது. மழை நீர் அகற்றப்பட்ட பின்னரே பேருந்து மீட்கப்படும் என அதிகாரிகள் தகவல்.


கோவை: கவுண்டம்பாளையம் அருகே திடீர் கனமழையின் காரணமாக மேம்பாலத்திற்கு அடியில் தேங்கி நின்ற மழைநீரில் மினி பேருந்து ஒன்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



இந்த நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த மினி பேருந்து ஒன்று கவுண்டம்பாளையம் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பேருந்து ஓட்டுநர் வெளியே வந்தார்.



முன்னதாக மழையின் வேகம் அதிகரித்தால் உடனடியாக போக்குவரத்து நிறுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றும் மீட்க முடியாததால், மழை நீர் அகற்றப்பட்ட பிறகு மினி பேருந்தை வெளியே எடுக்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...