கோவையில் லேப்டாப் திருடன் கைது - பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் பறிமுதல்!

கோவையில் பட்டதாரி இளைஞர் தங்கியிருந்த அறையில் லேப்டாப்-ஐ திருடிச்சென்ற நபரை, சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் வேலாண்டிபாளையம் பகுதியில் அறையெடுத்து இளைஞர் ஒருவர் தங்கியுள்ளார்.

அந்த அறையில் லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டு திரும்பிவந்து பார்த்தபோது பொருட்கள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.



இது தொடர்பாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், பாரதி நேசன் என்ற நபர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்து.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப், பென்டிரைவ், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...