தேர் திருவிழாவை முன்னிட்டு களை கட்டியது கோனியம்மன் கோவில்.



நாளை நடக்கவிருக்கும் கோவை புகழ் கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் ராஜகோபுரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

 புதிதாய் கட்டப்பட்டுள்ள கோனியம்மன் திருக்கோயில் ராஜகோபுரமானது முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி காண்போரை கவரும் வண்ணம் அமைந்துள்ளது. 



இன்று இரவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆன்மீக சிறப்புரை மற்றும் விசேஷ பூஜைகளில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவை மற்றும் சுற்றுப்புற இடங்களில் இருந்து வந்துள்ளனர்.  



 பச்சை பட்டு உடுத்தி, பாரம்பரிய நகைகள் மற்றும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மனுக்கு மேல தாளத்துடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் கோனியம்மன் கோவிலில் உள்ள திருவிழா கோடி கம்பத்திற்கு மஞ்சள் கலந்த புனித நீரையுற்றி பக்தி பரவசத்தோடு அம்மனை வழிபட்டுவருகின்றனர். 



கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் காவல் படையினர் நூற்றிற்கும் மேற்பட்டோர் கோவில் மற்றும் தேர் திருவிழா நடக்கவிருக்கும் பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றங்கள் மதியத்திலிருந்து இரவு வரை அறிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...