கோவை மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை - இளைஞர் கைது!

கோவை மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த சுந்தராபுரத்தை சேர்ந்த அஜித்(25) என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுக்கரை பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மதுக்கரை அடுத்த சுந்தராபுரம் ரோடு மெகா சிட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த அயாஜி மகன் அஜித்(25) என்பவரை போலீசார், கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 221 நபர்கள் மீது 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 442.211 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...