கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு நடத்தினார். அப்போது, அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின், பண உதவி ஆகியவற்றை வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
அப்போது, அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடியின மக்களுக்கு தையல் மிஷின் பண உதவி ஆகியவற்றை ஐந்து பேருக்கு வழங்கினார்.
கீழ்புனாச்சி ஆதிவாசி பழங்குடியின மக்கள் வாழும் இடத்தில் வனப்பகுதிக்குள் புதர்போல் காணப்படும் உன்னி செடியிலிருந்து சேர் டேபிள் அழகு பொருட்கள் போன்ற கைவினைப் பொருட்கள் தயாரித்து வருகின்றனர்.
அதை வனத்துறை அமைச்சர் பார்வையிட்டு, அவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பண உதவி மற்றும் பொருள் உதவிகளை வழங்கினார். ஆதிவாசி பழங்குடியினர்களுக்குதண்ணீர் வசதி, பொருள்கள் தயாரிக்கும் இடத்திற்கு செட், உன்னி செடிகளை கொண்டு வருவதற்கு வாகன வசதி ஆகியவைகளை வனத்துறை அமைச்சரிடம் ஆதிவாசி பழங்குடியின மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதை முதல்வர் அறிவுறுத்தலின் பேரில்கண்டிப்பாக செய்து தருவதாக அமைச்சர் மதிவேந்தன் உறுதி அளித்தார்.
அதன்பின்பு, சில தினங்களுக்கு முன்பு டாப்சிலிப் மானாம்பள்ளி வனப்பகுதிக்குள்இரவில் அபூர்வமாக காணப்பட்ட மின்மினி பூச்சி காணொளியை பார்வையிட்டு அதைப் புகைப்படம் எடுத்த ஸ்ரீராம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு அமைச்சர் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும் வனத்துறை சார்பாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதியையும் அவர் ஆய்வு செய்தார். ஆதிவாசி பழங்குடியின மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து தருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.