ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் - பல்லடம் காவல்நிலையத்தில் புகார்!

கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பெண்ணிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்று மாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அந்தப் பேருந்து பல்லடம் அருகே வந்தபோது, சூலூரில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர், அதே பேருந்தில் பணி முடிந்து கோவை ஒண்டிப்புதூரில் இருந்து வீடு திரும்பிய பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.



இதனால், அந்தப் பெண் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால், பயணிகளோடு அரசு பேருந்து ஓட்டுநர் பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்தினார். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்ட இளைஞர் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அந்த இளைஞரிடம் மகளிர் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திடீரென பயணிகளோடு அரசு பேருந்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...