கோவை அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு - எம்.எல்.ஏ அருண்குமார் பங்கேற்பு

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் அதிமுக நகர கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதி, அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு, மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.



கோவை: தமிழகத்தில் நிலவிவரும் கோடை வெயிலின் தாக்கத்தை பொதுமக்கள் தணிக்கும் விதமாக, அதிமுக சார்பாக ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக நகர் கழகம் சார்பாக நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.



இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் மற்றும் முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.

நீர் மோர் பந்தலை அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்,



பின்னர், அங்கிருந்த பொதுமக்களுக்கு, அவர் மோர், லெமன் ஜூஸ், வெள்ளரிக்காய் மற்றும் தர்பூசணிப்பழங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பி.ஏ, வேலுசாமி, வி.லட்சுமணசாமி, வி.சிவகுமார், முத்துசாமி, சம்பத்குமார், பி.எம்.நாகராஜ், சண்முகம், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...