வால்பாறையில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு!

கோவை மாவட்டம், வால்பாறை இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் தொழிலாளர்களை அமைச்சர் மதிவேந்தன் சந்தித்து நலம் விசாரித்தார்.



கோவை: வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப் வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பாற்றுவதற்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனப்பகுதிகளில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நேற்று முதல் ஆய்வு செய்தார்.



இன்று வால்பாறைக்கு வருகை தந்த வனத்துறை அமைச்சர் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சிறுத்தை தாக்கியவரையும், கரடி தாக்கியவரையும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரையும் சந்தித்து சிறுத்தை தாக்கிய வடமாநில தொழிலாளர் அணில் ஒரான் என்பவருக்கு ஐந்தாயிரம் நிவாரணம் வழங்கி அவருடைய உடல் நிலையை பற்றி மருத்துவரிடம் கேட்டறிந்தார்.



பின்பு இஞ்சிப்பாறை எஸ்டேட்டில் பகுதியில் கரடி தாக்கிய ஐயப்பன் என்பவரை சந்தித்து அவருக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி அளித்து அவருடைய உடல் நலத்தை கேட்டறிந்தார். அதன் பின்பு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தாக்கிய இடத்திற்கு சென்று அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய வைக்கப்பட்ட தானியங்கி கேமராவை பார்வையிட்டு மனித வன விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதை மக்களை அச்சுறுத்தாத வண்ணம் செயல்படுத்துவது என்று வனத்துறை அதிகாரியிடம் ஆலோசனை செய்தார்.

உடன் மாவட்ட வனத்துறை அலுவலர் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர், வன சரகர்கள் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...