மூன்றாம் தர அரசியல் செய்ய வேண்டாம்..! - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:



கோவை மாவட்ட வணிகர் சங்க மாநாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி, நிதிநிலை அறிக்கை தயார் செய்து அதன்படி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

ஏற்கனவே வேளாண்மைக்கு செஸ்வரி போட்டு திரும்ப பெறப்பட்டது. 10 சதவீதம் மின் கட்டண சலுகை வழங்கியதும் இந்த அரசுதான். ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியது திமுக அரசுதான்.

ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். அதிலிருந்து தவறாமல் பணியாற்றினால் நன்றாக இருக்கும். மதசார்பற்ற நாடு இந்தியா. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை.

இந்தியாவில் மக்களாட்சி தத்துவம்தான் சிறந்தது. அரசியலமைப்புச் சட்டம்தான் சிறந்தது. மக்களாட்சி சட்டம்தான் நடைபெறுகிறது. இதனைத் தெரிந்து சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வெடிவிபத்து தொடர்பாக விரைவான நடவடிக்கை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவர்களை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம்தர அரசியலை ஆளுநர் செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக பேசி மூன்றாம் தர அரசியல் ஆளுநர் செய்ய வேண்டாம்.

இந்தியாவில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி இருந்தால் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...