மூன்றாம் தர அரசியல் செய்ய வேண்டாம்..! - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் சூலூரில் வர்த்தக சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:



கோவை மாவட்ட வணிகர் சங்க மாநாட்டிற்கு வருகை தந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அரசு வர்த்தகர்களை அழைத்து பேசி, நிதிநிலை அறிக்கை தயார் செய்து அதன்படி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

ஏற்கனவே வேளாண்மைக்கு செஸ்வரி போட்டு திரும்ப பெறப்பட்டது. 10 சதவீதம் மின் கட்டண சலுகை வழங்கியதும் இந்த அரசுதான். ஒரு லட்சம் ரூபாயாக இருந்த இழப்பீட்டுத் தொகையை மூன்று லட்சம் ரூபாயாக உயர்த்தியது திமுக அரசுதான்.

ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பணியாற்ற வேண்டியவர்கள். அதிலிருந்து தவறாமல் பணியாற்றினால் நன்றாக இருக்கும். மதசார்பற்ற நாடு இந்தியா. இந்தியாவில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. மதசார்பற்ற நாடு என்பதை மதசார்புள்ள நாடுதான் என்பதை ஆளுநர்கள் பேசுவது, அரசியல் தலைவர்கள்போல் ஆளுங்கட்சிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பரப்பி வருவதும், மாடல் அழிந்துவிட்டது என்பதுபோல செல்வதும் சரியாக இல்லை.

இந்தியாவில் மக்களாட்சி தத்துவம்தான் சிறந்தது. அரசியலமைப்புச் சட்டம்தான் சிறந்தது. மக்களாட்சி சட்டம்தான் நடைபெறுகிறது. இதனைத் தெரிந்து சொல்கிறார்களா? தெரியாமல் சொல்கிறார்களா? என்று தெரியவில்லை.

வெடிவிபத்து தொடர்பாக விரைவான நடவடிக்கை தமிழக அரசு எடுத்தது. இது தொடர்பாக உள்துறை மற்றும் பிரதமர், குடியரசு தலைவர்களை சந்தித்து புகார் தெரிவிக்காமல் நான்காம்தர அரசியலை ஆளுநர் செய்கிறார். சட்டத்துக்கு புறம்பாக பேசி மூன்றாம் தர அரசியல் ஆளுநர் செய்ய வேண்டாம்.

இந்தியாவில் ஓபிசிக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ படிப்பில், இட ஒதுக்கீடு இந்தியாவிற்கு பெற்றுத் தந்தது திராவிட அரசுதான். ஆளுங்கட்சியைவிட எதிர்க்கட்சி இருந்தால் அதிக அளவில் வாய்ப்பு கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல் இந்தியா முழுவதும் சென்று உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...