சித்ரா பவுர்ணமி நாளில் வெள்ளியங்கிரிமலை ஏறிய மேலும் ஒருவர் பலி!

கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த குமார் (40), சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது, மயங்கி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். அவரை சோதித்த மருத்துவ உதவியாளர், மாரடைப்பில் குமார் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.


கோவை: வெள்ளியங்கிரி மலையில் ஏறிய மேலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் குமார் (40). இவர் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு வந்துள்ளார். இன்று மதியம் ஏழாவது மலைக்குச் சென்ற குமார் அங்கு சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்து விட்டு மீண்டும் கீழே இறங்கி உள்ளார்.

அப்போது ஆறாவது மலைக்கு வந்த போது திடீரென மயங்கி விழுந்த குமாரை அங்கிருந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்டு, மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் இருந்த உதவி மருத்துவர் சோதனை செய்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

குமார் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்ட ஆலாந்துறை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...