கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது தாயார் சாந்தாமணியுடன் குடியிருந்து வருகிறார். சாந்தாமணிக்கு புற்றுநோய் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனில்லாமல் சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், சாந்தாமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் முதல் மாடியில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்துள்ளார். அவரை உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனில்லாமல் சாந்தாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், சாந்தாமணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.