நீலகிரியில் களைகட்டும் கோடை சீசன் - கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சி தொடக்கம்!

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று 12-வது காய்கறி கண்காட்சி தொடங்கியுள்ளது. 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோ பஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப்பட்ட கம்பு செடி உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத் துறை, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.



இந்நிலையில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்த காய்கறி கண்காட்சியில் 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோபஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப் பட்ட கம்பு செடி உருவம், பூசணி காய்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிராகன், கத்திரிக்காய்களால் உருவாக்கபட்ட 3 யானைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.



இதுதவிர, 31 காய்கறிகளால் உருவாக்கபட்ட பல்வேறு உருவங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தன.



மேலும், பல்வேறு மாவட்டங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட பாண்டா கரடி, பவானிசாகர் அணை, இருவாச்சி பறவை, ஒட்டக சிவிங்கி, வரையாடுகள், மயில், பாகற்காயால் உருவாக்கப்பட்ட முதலை ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...